Archives: பிப்ரவரி 2023

banner image

அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். 1 யோவான் 3:16

ஒரு கோடைக்கால ஆய்வு நிகழ்ச்சியின் போது, சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்பைன் மலையில் ஏற விரும்பிய ஒரு சிறுவனைப் பற்றிய புத்தகத்தை என் மகன் படித்தான். இந்த இலக்குக்கான பயிற்சியே அவனது பெரும்பாலான நேரத்தை ஆக்கிரமித்தது. இறுதியாக அவன் மலையேறப் புறப்பட்டபோது, திட்டமிட்டபடி காரியங்கள் நடக்கவில்லை. மலை சாய்வின் மேலே, அவனது ஒருவர் அணி வீரர் நோய்வாய்ப்பட்டார். சிறுவன் தனது இலக்கை அடைவதற்குப் பதிலாக, அவருக்கு உதவி செய்ய அவருடன் தங்க…

banner image

ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன். கலாத்தியர் 4:22

கலாத்தியர்களின் இந்த அத்தியாயத்தில் பவுல் பாவத்தைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் ஆவிக்குரியதற்கும், ஜென்ம சுபாவத்திற்குமிடையே உள்ள உறவைப் பற்றிப் பேசுகிறார். தியாகத்தின் மூலம்தான் ஜென்ம சுபாவத்தை ஆவிக்குரியதாக மாற்ற முடியும். இது இல்லாமல் ஒரு நபர் பிளவுபட்ட வாழ்க்கையை நடத்துவார். ஜென்ம சுபாவத்தைப் பலியிட வேண்டும் என்று தேவன் ஏன் கோரினார்? தேவன் அதைக் கோரவில்லை. இது தேவனின் பரிபூரண சித்தம் அல்ல, மாறாக அவருடைய…

banner image

மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன். 2 கொரிந்தியர் 12:15

ஒருதரம், "பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால்" (ரோமர் 5:5); பிறரின் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவின் ஆர்வங்கள் மற்றும் நோக்கங்களுடன் நாம் வெளிப்படையாகவே நாம் ஒன்றுவதைக் காணத் தொடங்குகிறோம். மேலும் இயேசு ஒவ்வொரு தனி நபர் மீதும் அக்கறை கொண்டுள்ளார். நம்முடைய சொந்த நலன்கள் மற்றும் விருப்பங்களால் வழிநடத்தப்படுவதற்குக் கிறிஸ்தவ சேவையில் நமக்கு உரிமை இல்லை. உண்மையில், இது இயேசு கிறிஸ்துவுடனான நமது உறவின் மிகப்பெரிய சோதனைகளில்…

banner image

நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும் (வ.16). எபேசியர் 3:14-21

கோடீஸ்வர நிறுவனர்களான பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோரால் 2009 இல் உருவாக்கப்பட்ட "தி கிவிங் ப்லெட்ஜ்", உலகின் பெரும் செல்வந்தர்கள் தங்கள் பணத்தில் பெரும்பகுதியை மற்றவர்களுக்கு கொடுத்து உதவுமாறு ஊக்குவிக்கும் ஒரு செயல்திட்டமாகும். பஃபெட், தானே தலைமை தாங்குகிறார். மேலும் அவர் இறக்கும் நேரத்தில் தனது செல்வத்தில் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளார். இது நம்பமுடியாத தாராளமான செயல்! ஆனால் அவரது தற்போதைய சொத்து மதிப்பு 72.3…

banner image

அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும். யாத்திராகமம் 32:21-32

எகிப்து சிறையில் 400 நாட்களைக் கழித்த ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் விடுதலையானபோது பலவகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். தனது விடுதலைக்கான நிம்மதியை ஒப்புக்கொண்டாலும், தான் பிரிந்து செல்லும் நண்பர்களும் இன்னும் எவ்வளவு காலம் சிறையிலிருப்பார்களென்று தெரியாததால் அவர்களுக்காக ஆழ்ந்த கவலையுடன்தான் தனது சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார். தன்னுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சக நிருபர்களிடமிருந்து விடைபெறுவது மிகவும் கடினமாக இருப்பதாக அவர் கூறினார்.

நண்பர்களை விட்டுச் செல்வதை நினைத்து…

banner image

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம். கலாத்தியர் 5:22-23

பிப்ரவரி 2020 இல், கோவிட்-19 நெருக்கடி துவங்கிய காலம். ஒரு செய்தித்தாள் கட்டுரையாளரின் கரிசனை என் கவனத்தை ஈர்த்தது. "நாம் விருப்பத்துடன் தனிமைப்படுத்திக் கொள்வோமா? மற்றவர்கள் நோய்வாய்ப்படாமல் இருக்க நமது வேலை, பயணம் மற்றும் கடையில் வாங்கும் பழக்கங்களை மாற்றிக் கொள்வோமா?" என்று வியந்தார். மேலும் "இது வெறும் மருத்துவம் சார்ந்த சோதனை மட்டுமல்ல, மற்றவர்களுக்காக நம்மை இழக்கும் நமது விருப்பத்திற்குமான சோதனையும்தான்" என்று அவர் எழுதினார். திடீரென்று…

banner image

பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக; அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். கலாத்தியர் 1:3-4

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு புதுமையான ஆங்கிலப் பத்திரிகையாளரான டபிள்யூ.டி. ஸ்டெட், சர்ச்சைக்குரிய சமூகப் பிரச்சினைகளைப் பற்றி எழுதுவதில் பேர்பெற்றவர். அவர் வெளியிட்ட இரண்டு கட்டுரைகள், பயணிகளுக்கான உயிர்காக்கும் படகுகள் போதிய விகிதத்திலின்றி கப்பல்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் ஆபத்தை எடுத்துரைத்தது. அதற்கேற்றாற்போல், ஏப்ரல் 15, 1912 இல் வடக்கு…

தியாகம்

அறிமுகம்

தியாகம் என்பது கிறிஸ்தவத்தின் மையக் கருப்பொருளாகும், இது இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்த இறுதி தியாகத்தில் வேரூன்றியுள்ளது. வரலாறு முழுவதும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களில் இது குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. கிறிஸ்தவர்களாகிய நாம், கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நம்முடைய சொந்த வாழ்க்கையில் தியாகங்களைச் செய்ய அழைக்கப்படுகிறோம். ஊழியங்களின் வாயில் மற்றவர்களுக்காக நம்முடைய சொந்த விருப்பங்களை விட்டுக்கொடுக்கவும், அல்லது நம் விசுவாசத்திற்காக உபத்திரவப்படவும் கூட அழைக்கப்படுகிறோம்.

தனிநபர் முக்கியத்துவத்தையும், சுய திருப்தியையும் எப்போதும் மதிக்கும் இவ்வுலகில் தியாகம் என்ற கருத்தைப் புரிந்துகொள்வது கடினம். இருப்பினும் கிறிஸ்தவர்களாகிய நாம்,…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விண்வெளி பந்தயம்

ஜூன் 29, 1955 இல், அமெரிக்கா செயற்கைக்கோள்களை விண்வெளியில் அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. விரைவில், சோவியத் யூனியனும் அதைச் செய்வதற்கான திட்டங்களை அறிவித்தது. விண்வெளிக்கான பந்தயம் தொடங்கியது. சோவியத், முதல் செயற்கைக்கோளை (ஸ்புட்னிக்) ஏவியது மற்றும் யூரி காகரின் நமது கிரகத்தை ஒரு முறை சுற்றி வந்தபோது, முதல் மனிதனையும் விண்வெளியில் செலுத்தியது. ஜூலை 20, 1969 அன்று, நிலவின் மேற்பரப்பில் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் “கால்தடம்” போட்டியை அதிகாரப்பூர்வமற்ற முறையில் முடிக்கும் வரை இந்த பந்தயம் நீடித்தது. இனைந்து பணியாற்றும் காலம் விரைவில் உதயமானது, இது சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்க வழிவகுத்தது.

சில நேரங்களில் போட்டி ஆரோக்கியமானதாக இருக்கலாம், அது நாம் முயற்சி செய்யாத விஷயங்களைச் சாதிக்க நம்மைத் தூண்டுகிறது. இருப்பினும், மற்ற நேரங்களில், போட்டி அழிவுகரமானது. கொரிந்துவில் உள்ள சபையில் இது ஒரு பிரச்சனையாக இருந்தது, ஏனெனில் வெவ்வேறு குழுக்கள் பல்வேறு சபை தலைவர்களை தங்கள் நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்களாகப் பற்றிக்கொண்டன. இதனைச் சமாளிக்க பவுல், “நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்” (1 கொரிந்தியர் 3:7) என்று எழுதியபோது, “நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்” (வ.9) என்று நிறைவு செய்தார்.

உடன்வேலையாட்கள்; போட்டியாளர்கள் அல்ல. மேலும் ஒருவருக்கொருவர் மட்டுமல்ல, தேவனோடும்! அவருடைய அதிகாரம் மற்றும் அவரது வழிகாட்டுதலின் மூலம், இயேசுவின் செய்தியை முன்னெடுத்துச் செல்ல உடன்வேலையாட்களாக நாம் ஒன்றுசேர்ந்து பணியாற்றலாம், நம்முடையதை காட்டிலும் அவருடைய மகிமைக்காக. 

 

புதிதாக வாழுதல்

ஒரு பள்ளியின் சிறந்த மாணவர்கள் கல்விச் சாதனைக்கான சான்றிதழைப் பெற்றபோது கைதட்டல்கள் முழங்கின. ஆனால் அதோடு நிகழ்ச்சி முடிவடையவில்லை. அடுத்த விருது பள்ளியின் “சிறந்த” மாணவர்கள் அல்ல, மாறாக மிகவும் மேம்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர்கள் தோல்வியடைந்த பாடத்தில் முன்னேற, சீரழிக்கும் நடத்தையை மாற்றிக்கொள்ள அல்லது வகுப்புக்கு தவறாமல் வருகை தரக் கடினமாக உழைத்தவர்கள். அவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்து கைதட்டி, தங்கள் பிள்ளைகள் உயர்ந்த பாதைக்குத் திரும்பியதை ஏற்றுக்கொண்டனர். அவர்களின் முந்தைய குறைபாடுகளைப் பார்க்காமல் அவர்கள் புதிய பாதையில் நடப்பதைக் கண்டனர்.

நமது பழைய வாழ்க்கையை அல்ல, இப்போது கிறிஸ்துவில் அவருடைய பிள்ளைகளாக நம்மை நம்முடைய பரலோகத் தகப்பன் எப்படிப் பார்க்கிறார் என்பதைச் சிறிய கற்பனையாகச் சிந்திக்க வைக்கும் காட்சியாக இது அமைந்திருந்தது. “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவான் 1:12) என்று யோவான் எழுதினார்.

என்ன ஒரு அன்பான நோக்கம்! எனவே பவுல், “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்(தீர்கள்)த” (எபேசியர் 2:1) என்று புதிய விசுவாசிகளுக்கு நினைவூட்டினார். ஆனால் உண்மையில், “நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்” (வ.10).

இதேபோல பேதுருவும், நம்மைக்குறித்து “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்” என்றும் முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்(1 பேதுரு 2:9-10) என்றும் எழுதினார். தேவனின் பார்வையில், நம்மீது நமது பழைய வாழ்க்கைக்கு அதிகாரமில்லை. தேவன் பார்ப்பது போல் நாமும் நம்மைப் பார்ப்போம், புதிய வாழ்வில் நடப்போம். 

 

மனந்திரும்பும் இருதயம்

ஒரு நண்பர் தனது திருமண உறுதிமொழியை மீறினார். அவரே தனது குடும்பத்தை அழிப்பதைப் பார்ப்பது வேதனையாக இருந்தது. அவர் தனது மனைவியுடன் சமரசம் செய்ய முயன்றபோது, என்னிடம் ஆலோசனை கேட்டார். அவர் வார்த்தைகளில் அல்ல செயல்களில் காட்ட வேண்டுமென்றும்; தனது மனைவியை நேசிப்பதிலும் பாவத்தின் எந்த வடிவத்தையும் அகற்றுவதில் முனைப்புடன் இருக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன்.

கர்த்தருடன் செய்த உடன்படிக்கையை மீறி அந்நிய தேவர்களைப் பின்பற்றியவர்களுக்கு எரேமியா தீர்க்கதரிசி இதே போன்ற ஆலோசனை வழங்கினார். அவரிடம் திரும்புவது நல்ல துவக்கமாக இருந்தாலும், அது மட்டும் போதாது (எரேமியா 4:1). அவர்கள் சொல்லோடு அவர்கள் செயல்களையும் இசைவாகச் சீரமைக்க வேண்டும். அது அவர்களின் “அருவருப்பான விக்கிரகங்களை” அகற்றுவதைக் குறிக்கிறது (வ. 1). எரேமியா, அவர்கள் “உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும்” அர்ப்பணித்தால், தேவன் தேசங்களை ஆசீர்வதிப்பார் என்றார் (வ. 2). மக்கள் வெற்று வாக்குறுதிகளை அளிப்பதுதான் பிரச்சனை. அவர்களின் இருதயம் அதிலே இல்லை.

தேவனுக்கு வெறும் வார்த்தைகள் வேண்டாம்; அவருக்கு நம் இருதயங்கள் வேண்டும். இயேசு கூறியது போல், “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” (மத்தேயு 12:34). அதனால்தான், எரேமியா தனக்குச் செவிகொடுப்பவர்களை “நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்” (எரேமியா 4:3) என்று ஊக்கப்படுத்துகிறார்.

கவலைப்படத்தக்கதாக, பலரைப் போலவே, எனது நண்பரும் சரியான வேதாகம அறிவுரைகளுக்குச் செவிசாய்க்கவில்லை, அதன் விளைவாக அவரது திருமண வாழ்வை இழந்தார். நாம் பாவம் செய்யும்போது, அதை ஒப்புக்கொண்டு அதிலிருந்து திரும்ப வேண்டும். தேவனுக்கு வெற்று வாக்குறுதிகள் வேண்டாம்; அவருடன் உண்மையிலேயே இசைந்திருக்கும் ஒரு வாழ்க்கையை விரும்புகிறார்.